பல்சுவை செய்திகள்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (22.09.2019)

மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் முக்கியவிஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிக மாகும். தர்மசங்கடமான சூழல்களை சமா ளிக்க வேண்டிய நாள்.

கடகம்: எடுத்த வேலை களை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபா ரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென் றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப் பார்கள். இனிமையான நாள்.

கன்னி: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்,நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் வெற்றி கிட்டும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எதை யும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண் டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.

தனுசு: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியா பாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். மாறுபட்ட அணுகு முறை யால் சாதிக்கும் நாள்.

கும்பம்: திய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர் கள். நட்பு வட்டம் விரியும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத் யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்: திர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒருவேலை முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.