முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மைத்துனர் கைது! எதற்காக?
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மைத்துனரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (03) காலை பண்டார ரம்புக்வெல்லவின் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணச்சலவை (Money Laundering) குற்றச்சாட்டின் கீழேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

