புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் கணவன், பிள்ளைகள்!! இலங்கையில் மச்சனுடன் லீலை புரியும் முல்லைத்தீவு பிரியா மச்சானின் மனைவிக்கு அனுப்பிய வீடியோ இது!!

கணவனைப் பிரிந்த பின் லண்டனில் பிளைக்பூல் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் வாழ்ந்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 35 வயதான விமலேந்திரன் பிரியா தனது கணவனை விவாகரத்து செய்த பின் மற்றொரு குடும்பத்தையும் நடுத்தெருவில் விட்டுள்ளாள். 4 மாத கைக் குழந்தை உட்பட 2 பிள்ளைகளின் தாயாரான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பிரியா கொடூரச் செயற்பாடுகள் செய்து வருகின்றாள். தனது சொந்த மாமனின் மகனான வவுனியாவில் வசித்து வரும் 27 வயதான திருமணமான குடும்பஸ்தனை தனது இன்னொரு கணவனாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றாள் பிரியா.

பிரியாவின் மாமனின் மகனான சுரேஸ்வரன் 2022ம் ஆண்டு வவுனியாவைச் சேர்ந்த ஏழைக்குடும்பத்தில் வாழ்ந்து வந்த யுவதியை காதலித்து திருமணம் முடித்திருந்தான். சுரேஸ்வரன் தனியார் வாகனம் ஒன்றின் சாரதியாக தொழிற்பட்டவன். சுரேஸ்வரன் காதலித்து திருமணம் முடித்ததால் அவனை அவனது உறவுகள் சேர்க்கவில்லை. இதன் காரணமாக மனைவியின் பிரதேசத்திலேயே சுரேஸ்வரன் வாழ்ந்து வந்துள்ளான்.

இந் நிலையில் சுரேஸவரனுடன் அவனது மாமன் மகளான பிரியா லண்டினிலிருந்து தொடர்பு எடுத்து பல தடவைகள் கதைத்து வந்ததாக சுரேஸ்வரனின் மனைவி தெரிவித்தார். அதன் பின்னா் தனது மூத்த மகன் பிறந்து ஓரிரு மாதத்தில் சுரேஸ்வரனுக்கு ஆட்டோ ஒன்றை எடுப்பதற்கு 10 லட்சம் பணம் பிரியா அனுப்பியுள்ளார். இவ்வாறு பிரியா சுரேஸ்வரனு்ககு உதவி செய்து வந்ததால் சுரேஸ்வரனின் மனைவி சந்தோசமடைந்துள்ளாள்.

பிரியா லண்டனில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வருவதை சுரேஸ்வரன் மனைவிக்குத் தெரிவிக்கவில்லை. 2023ம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் லண்டனிலிருந்து முல்லைத்தீவு வந்த பிரியா சுரேஸ்வரனுடன் தொடர்ச்சியாக பல இடங்களுக்கும் சுற்றத் தொடங்கியள்ளாள். இதன் காரணமாக மனைவிக்கு சந்தேகம் வந்துள்ளது. வீட்டுக்கும் வராது பிரியாவுடன் சுரேஸ்வரன் சுற்றுவது தொடர்பாக மனைவி முரண்பட்டுள்ளாள். இதனால் அவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

ஓரு மாதங்கள் இலங்கையில் தங்கியிருந்த பிரியா மீண்டும் லண்டன் சென்ற பின்னரே சுரேஸ்வரன் மனைவியுடன் வந்து தங்கியுள்ளான். மீண்டும் ஒரு வருடம் கழித்து பிரியா தனது பிள்ளைகளை லண்டனில் விட்டு விட்டு தனியே இலங்கைக்கு வந்த போது சுரேஸ்வரனை அவளுடன் செல்ல வேண்டாம் என மனைவி தடுத்தும் சுரேஸ்வரன் அதனைக் கேட்காது அவளுடன் சுற்றித்திரிந்துள்ளான். இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து மோதல் கைகலப்பாக மாறி சுரேஸ்வரன் மனைவியைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது. இதையடுத்து மனைவியின் இரு தம்பிகள் சேர்ந்து சுரேஸ்வரன் பிரியாவுடன் முல்லைத்தீவு வற்றாப்பளை கோவிலுக்கு சென்று திரும்பிய வேளை இடை மறித்து தாக்கியுள்ளார்கள். பிரியாவும் காயமடைந்துள்ளாள். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு மனைவியின் இரு தம்பிகளும் 15 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இதன் பின்னரே பிரியா தனது வில்லத்தனத்தை அரங்கேற்றி வருகின்றாள். தற்போது சுரேஸ்வரன் மனைவியிடம் செல்வதில்லை. மனைவி தற்போது 4 மாத கைக்குழந்தை மற்றும் 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றாள். மனைவியின் வட்சப் இலக்கத்திற்கு பிரியா தான் சுரேஸ்வரனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அனுப்பி வருவதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்ட போதும் குறித்த படங்கள் ஆபாசமாக இல்லாத காரணத்தால் தம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் கணவரின் விருப்பு வெறுப்புக்களை தம்மால் கட்டுப்படுத்த முடியாது எனவும் விரும்பினால் குறித்த புகைப்படங்களை வைத்து விவாகரத்து வாங்குமாறு கூறி சுரேஸ்வரனின் மனைவியை அனுப்பியுள்ளார்கள்.

தனது 2 குழந்தைகளுடன் தனது கணவனுடன் சேர்ந்து வாழவே தற்போதும் மனைவி நினைக்கின்றாள். ஆனால் சுரேஸ்வரனை பிரியா மனம் மாற்றி தனது கணவன் போல் நடாத்தி வருவதாக மனைவி தெரிவிக்கின்றார். தனது குடும்பத்தையும் நாசமாக்கி மற்றுமொரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையையும் நாசமாக்கி செயற்படும் பிரியாவைப் போன்றவர்கள் திருந்துவார்களா? அல்லது சமூகத்தால் தண்டிக்கபடுவார்களா?