யாழ் செம்மணியில் ஆட்டோ, பஸ், மோட்டார் சைக்கிள் விபத்து!! பிரபல விளையாட்டு வீரர் பலி!!
யாழ் செம்மணிப்பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ், ஆட்டோ என்பன ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்குப்பட்டு சற்று முன் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்றைய (13)தினம் இடம்பெற்ற கோர விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரரே உயிரிழந்துள்ளார்.
வயலுக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி
இந்நிலையில் இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.
மேலும் விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











