கிளிநொச்சியில் மீட்கப்பட்ட கஞ்சா!
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீட்டின் பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று (20) கிளிநொச்சி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடரில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.