இலங்கை விமானப்படையின் மர்மான முறையில் விமானம் வீழ்ந்து நொருங்கியது!! சுடப்பட்டதா?? (Photos)
ஹப்புத்தளை பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இலகுரக விமானமொன்று ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் பயணித்த நால்வர் உயிரழந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
வீரவில பகுதியில் இருந்து பயணித்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Y12 ரக விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது என்று விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்ம விமான விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இருவர் விமானிகள் என்றும் மற்றைய இருவர் கண்காணிப்பாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.





