புதினங்களின் சங்கமம்

யாழில் கொடூரம்!! ரயில் மோதிப் பல உயிர்கள் கோரப்பலி!! (Photos)

யாழ்ப்­பா­ணம், தென்­ம­ராட்சி, எழு­து­மட்­டு­வாழ், ஆசைப்­பிள்ளை ஏற்­றத்­தில்
தொட­ருந்­து­டன் மோதி 5 கால்­ந­டை­கள் உயி­ரி­ழந்­துள்ளன.

இந்­தச் சம்­ப­வம் நேற்று பிற்பகல் 2 மணி­ய­ள­வில் இடம் பெற்றுள்ளது.
காங்­கே­சன்­து­றை­யில் இருந்து கொழும்பு நோக்­கிப் பய­ணித்த தொட­ருந்­து­டனே
கால்­ந­டை­கள் விபத்­துக்குள்­ளா­கின.

தொட­ருந்­தில் கால்­ந­டை­கள் மோதி இறக்­கும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.
கால்­நடை வளர்ப்­போர் தமது கால்­ந­டை­க­ளைக் கட்­டாக்­கா­லி­க­ளாக விடு­வ­தா­லேயே
இவ்­வா­றான விபத்­துக்­கள் நடக்­கின்­றன என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான அவல உயி­ரி­ழப்­புக்­க­ளைத் தவிர்ப்­ப­தற்கு மக்­கள் தமது கால்­ந­டை­க­ளைக் கட்டி வளர்க்க வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே வேளை
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடருந்து மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் இறந்துள்துடன் மற்றொரு கன்று காயமடைந்தள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை பயணித்த தொடருந்து தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகளை மோதியுள்ளது. இதன் காரணமாக இரண்டு கன்றுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

Image may contain: 2 people, people smiling, people standing, outdoor and natureImage may contain: outdoor