புதினங்களின் சங்கமம்

பூநகரியில் 28 வயது பிரணவனை வாளால் துண்டு துண்டா வெட்டிக் கொலை செய்தவர்கள் யார்?

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று (31) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பூநகரி தம்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் மீது அடையாளம் தெரியாதவர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தாக்குதலுக்குள்ளான இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். 28 வயதுடைய கந்தசாமி பிரணவன் என்ற நபரே உயிரிழந்துள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x