புதினங்களின் சங்கமம்

அவுஸ்திரேலியாவில் நண்பரை கொடூரமாக கொலை செய்த யாழ் தியாகராஜாவுக்கு நடந்த கதி!! !

அவுஸ்திரேலியாவில் தனது நண்பனை கொலை செய்த வழக்கில் இலங்கையை சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அடிலைட் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையரின் அறையில் தங்கியிருந்த முஹமது என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது 40 வயதான கணேஷமூர்த்தி தியாகராஜா என்பவர் கொலையாளியாக இனம் காணப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க இம்மாத இறுதியில் இருந்து அவர் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தியாகராஜாவை ஐ.எஸ் அமைப்பில் இணையுமாறு முஹமது பலவந்தப்படுத்தியதால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக குற்றவாளியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். எனினும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

தனது நண்பரை திட்டமிட்டே கொலை செய்துள்ளார். அவரின் கழுத்தில் மிகப் பெரிய காயம் உள்ளது. உடலின் ஏனைய பாகங்களிலும் 40 இற்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளதாக கொலை செய்யப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் Patrick Dawes தெரிவித்துள்ளார்.

முஹமது கொலை செய்யப்பட்டுள்ளமையினால் அவரது குடும்பம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கணேஷமூர்த்தி தியாகராஜா என்பவர் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்று புகலிடம் கோரியவர் ஆவர். இவர் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்திருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.