யாழில் உடலில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பகுதியில் இன்றைய தினம்(02) அதிகாலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு உடலில் கயிறு கட்டிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் வேதனை தாங்க முடியாமலே தனது உயிரை இவ்வாறு மாய்த்துக் கொண்டதாக தெரியவருகின்றது.மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

