யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மாணவர்கள் போதைப் பொருள் வியாபாரிகளா? வீடியோ
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் மாவா போதை பாக்கு எச்சில் துப்பல்கள் பரந்து காணப்படுகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்திற்கு செல்லக்கூடிய பிரதான நுழைவாயிலில் இவ்வாறு மாவா போதைப் பாக்கு துப்பல்கள் பரந்து காணப்படுகின்றன ஆலயத்திற்கு செல்வோரையும், பல்கலைக்கழகத்திற்கு அவ் வழியால் செல்வோரையும் அருவருக்கவைப்பதாக உள்ளதோடு சுகாதாரத்துற்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உரிய கவனம் எடுத்து ஆலயத்திற்கு செல்லக்கூடிய பாதையினை சுத்தப்படுத்தி தருமாறும். குறித்த பிரதேசத்தில் போதைப் பாவனையை கட்டுப்படுத்துமாறும் சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இன் நிலையில் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்திற்க முன்னால் உண்ணாவிரதப் போராட்த்தை நடத்திய சிலர் மாவா போதை வியாபாரிகள் என தெரியவநதுள்ள நிலையில்.
பேராசிரியர் ரகுராமுக்கு சவால் விடும் வகையில் விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக போராட்டத்தை நடாத்தினார்களா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

