புதினங்களின் சங்கமம்

பருத்தித்துறையில் பொலிஸ் புலனாய்வுதுறையில் வேலை செய்த தமிழ் குடும்பப் பெண் கொடூரமாக கொலை!! கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றுக்குள் சடலம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தம்பசிட்டிப் பகுதியில், கைகள் கட்டப்பட்ட நிலையில் தோட்டக்
கிணற்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறத்த குடும்பப் பெண் காங்கேசன்துறை பொலிஸ்பிரிவில் பொலிஸ் புலனாய்வுத்துறையில் கடமையாற்றியுள்ளார். தம்பசிட்டியைச் சேர்ந்த இவர்ககள் கணவனும் மனைவியுமாக வசித்து வந்துள்ளனர். இந் நிலையில் நேற்று இரவு கணவன் வயிற்றோட்டம் காரணமாக அவதியுற்று மலசலகூடத்துக்கு பலதடவைகள் சென்று வந்த போது படுத்திருந்த மனைவி காணாமல் போயுள்ளார். அதன் பின்னர் தேடுதல் நடாத்திய போது மனைவி கை கால்கள் கட்டப்பட்ட நிலயைில் கிணற்றுக்குள் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.