புதினங்களின் சங்கமம்

ஆலயத்துக்குள் புகுந்து காவாலிகள் அட்டகாசம்!! புகைப்படங்கள்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அலகரை முருகன் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, அங்கு புகுந்த குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. காவடிஆட்டம் மற்றும் இரவு நிகழ்வாக மாலைக்குவாதாடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து என்பன நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திடீரென ஆலயத்துக்குள் புகுந்த குழு ஒலிபெருக்கி சாதனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், பறைஅடித்தவர்கள் மற்றும் ஆலய வளாகத்தில் இருந்த வர்த்தகர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.