இரணைமடுக்குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 14 வயது றுசாந்தனைக் காணவில்லை!! தேடுதல் தீவிரம்!!
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.குளத்தில் நீராடுவதற்காக நண்பர்களுடன் சென்றிருந்த நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் றுசாந்தன் எனும் சிறுவனே காணாமல் போயுள்ளான்.
சிறுவன் நீரில் மூழ்கியதையடுத்து அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களுக்கும் சிறுவன் கூட சென்ற ஏனைய சிறுவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை அடுத்து சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.