புதினங்களின் சங்கமம்

தலை முடி உலர்த்த முற்பட்ட ஓ.எல் மாணவன் மின்சாரம் தாக்கிப் பலி!!

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்குள்ளாகி வியாழக்கிழமை (30) காலை உயிரிழந்துள்ளார்.தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி (hair dryer) மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே, இவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இவரது மரண விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம், மின்சாரம் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்து ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.