யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்..!
நேற்றைய தினம் அராலியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயத்தை ஏற்படுத்திய கணவன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கணவன் – மனைவி ஆறு வருடங்களாக பிரிந்து இருக்கின்றனர். இந்நிலையில் வன்னியில் வசிக்கும் மனைவி, யாழ்ப்பாணம் – அராலியில் உள்ள அவரது அக்காவின் வீட்டிற்கு வந்து செல்வது வழமை.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான பெண், புது வருட கொண்டாட்டத்திற்காக சகோதரி வீட்டுக்கு வந்திருந்த நிலையில் கணவனால் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

