புதினங்களின் சங்கமம்

யாழில் நிறை வெறியில் சந்நிதி முருகனை வெள்ளோட்டம் செய்ய முற்பட்ட போதே விபத்து!! ஒருவர் பலியானதன் பின்னணி இது!!

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் நேற்று (27) பாரவூர்தி மோதி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அருகில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்திருந்தது. லாண்ட் மாஸ்டர் சாரதியான சீனியன் இராசன் (65) என்பவர் வீதியோரம் லாண்ட் மாஸ்டரை நிறுத்தி வைத்து விட்டு, வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்த போது, பாரவூர்தியொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரைக்கு பாய்ந்து, லாண்ட் மாஸ்டர், சாரதியை மோதித்தள்ளி, அருகிலிருந்த மின்சார கம்பம், தேக்கம் மரத்தையும் மோதியது.

விபத்தை ஏற்படுத்தியவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

அவர் தனது நெருங்கிய உறவினர் ஒருவரிடமிருந்து 42 இலட்சம் ரூபாவிற்கு பாரவூர்தியை கொள்வனவு செய்திருந்தார். நேற்றுத்தான் பாரவூர்திக்கான முழுமையான பணத்தையும் செலுத்துவதாக இருந்துள்ளது.

பாரவூர்தியில் இன்று முதலாவது பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நேற்று வாகனத்தின் பிரேக் முதலியன சரியாக இயங்குகிறதா என பரிசோதிப்பதற்காக செலுத்திப் பார்த்துள்ளனர்.

இதன்போதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.