புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் கலைமகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்து!! பல மாணவர்கள் படுகாயம்!!

முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவர்களை நேற்று ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள். விளையாட்டுப் போட்டிக்காக தடிகள் ஏற்றுவதற்கு அதிபரால் உழவு இயந்திரத்தில் ஏற்றி அனுப்பபட்ட மாணவர்களே விபத்துக்கு உள்ளானதாக தெரியவருகின்றது. அதிபரின் இச் செயற்பாடு தொடர்பாக பெற்றோர் கடும் விசனமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.