Entertainmentபுதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் வாய்க்காலுக்குள் இருந்து டினேஸ் சடலமாக மீட்கப்பட்டார்!!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (20) காலை பன்னங்கண்டி பகுதியில் வீதியோரமாக வாய்க்கால் பகுதிக்குள் சடலம் காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தில் சில காயங்களும் தென்பட்டன.

உயிரிழந்தவர் மதுபோதைக்கு அடிமையானவர். மது போதையில் வரும் போது விபத்தில் சிக்கினாரா அல்லது குற்றச்சம்பவமா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.