புதினங்களின் சங்கமம்

தென்னிலங்கைக்கு சென்ற தினேஸை காணவில்லை!! யாழில் மனைவி பொலிசாரிடம் முறைப்பாடு!!

தொழில் நிமித்தம் கம்பஹா சென்ற தனது கணவருடன் இதுவரை எவ்வித தொடர்பும் இல்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று கம்பஹா மாவட்டத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன் வடக்கைச் சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் எனும் 38 வயதுடைய நபரே சென்றுள்ளார்.அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக அவரது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடந்த 28 ஆம் திகதி கம்பஹாவிற்கு சென்றுள்ளதாகவும், அங்கு தொடர்ந்தும் வேலை செய்து வருவதாகவும் கடந்த மாதம் 30 ஆம் திகதி காணாமல்போன கணவன் தன்னுடன் பேசியதாக மனைவி தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கடந்த 30 ஆம் திகதி முதல் இன்றுவரை தனது கணவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார். காணாமல் போன யாழ் குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யாழ் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x