புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கையைச் சேர்ந்த ஈசன் சிங்கப்பூரில் மனைவியைக் குத்திக் கொலை செய்தார்!!

சிங்கப்பூரில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிங்கப்பூரின் ஈஸ்ட்கோஸ்ட் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது மனைவியை கொலை செய்த நபர் இலங்கையைர் ஒருவர் அதன்பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்துதான் கொலை செய்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.அவருக்கு எதிராக சிங்கப்பூர் பொலிஸார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.சிங்கப்பூரின் கட்டொங்கில் உள்ள ஹொலிடே இன் எக்ஸ்பிரசில் தங்கியிருந்த இலங்கையரான ஈசன் தாரக கொட்டாகே தனது மனைவியை குத்திக்கொலை செய்துள்ளார்.அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து நடந்ததை தெரிவித்தவேளையே பொலிஸாருக்கு உண்மை தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து பொலிஸார் குறிப்பிட்ட ஹோட்டலிற்கு சென்றவேளை அங்கு பாதிக்கப்பட்டவர் அசைவற்ற நிலையில் காணப்பட்டதை கண்டுள்ளனர்.அங்கு காணப்பட்ட துணைமருத்துவ பிரிவினர்அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ஹோட்டல்அறையிலிருந்து கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.திங்கட்கிழமை சந்தேகநபர் வீடியோ மூலம் நீதிமன்றத்திற்கு நடந்ததை தெரிவித்துள்ளார்