யாழ் வேலணை மகாவித்தியாலய மாணவர்களுக்கு நஞ்சூட்டியவர்கள் யார்? (வீடியோ)
Va Vadivalakaiyan
வடக்கில் திருக்கேதீஸ்வர உடைப்புடன் கடந்த சில ஆண்டுகளாக விதைக்கப்பட்ட மதவாதம் எனும் நச்சு விதையானது இன்று மரமாக வளரத் தொடங்கியுள்ளது.: வேலணை மத்திய கல்லூரிக்கு ஒரு கத்தோலிக்கத் தலைமை ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து வீதிக்கு இறங்க வைக்கப்பட்ட மாணவர்கள்.சில மூன்றாம் தர நபர்கள் பின்னணி யுடன் .
பின்புலம் : இக் கல்லூரி தரம் 1 தகுதியுடைய கல்லூரி. இக் கல்லூரிக்கு தரம்1 தகுதியுடைய ஒருவர் பணிக்கு அமர்த்த வேண்டும். அப் பதவிக்கு விண்ணப்பித்த மூவரில் ஒருவர் மட்டுமே தரம் 1 தகுதியினையுடையவர், அந்த வகையில் அப் பதவி அவரினையே சாரும். அதனை எதிர்த்தே இன்று மாணவர்கள் பிழையாக மதவாதம் புகுத்தப்பட்டு, வீதிக்கு இறங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்ப்பவர்கள் சொல்லும் வாதம் என்ன? இந்து கல்லூரி என்றாலும் ஒரு லாஜிக் இருக்காலம்..
? “குறித்த முதல்வர் ஒரு கத்தோலிக்கர் , இவர் இப் பள்ளியின் முதல்வரானால் ‘சைவப் பாரம்பரியம்’ கெட்டு விடும்”.???
மத்திய கல்லூரிகள் ( Central colleges) உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஆங்கிலக் கல்வியினையும், அறிவியல் பாடத்தினையும் வளர்ப்ப்பதே. இதற்காகவே மத்திய கல்லூரிகள் , மதம் வளர்ப்பதற்கு அன்று. இன்று குறித்த முதல்வர் கற்பிக்கும் பள்ளியின் பெயரோ ‘இராமகிருஷ்ண ‘ என்ற கல்லூரி , அங்கு கெட்டுப் போகாத பாரம்பரியம் இங்கு எப்படிக் கெடும்???
தனிப்பட்ட விடயங்களை பகிர்வது தவறு ஆனாலும்..அவர் திருமணம் செய்தது ஒரு சைவ சமயம் சார்ந்த பெண்ணினை. அப் பெண் இன்றும் சைவ சமயத்தினையே பின்பற்றுகின்றார். அவர்களது பிள்ளைகளும் சைவத்தினையே பின்பற்றுகின்றனர். இப்படிச் சொந்த மனைவி, சொந்தப் பிள்ளைகளையே மதம் மாற்றாதவர், எப்படி மாணவர்களை மதம் மாற்றுவார்???
ஏன் இப்போது கற்பிக்கும் கல்லூரியில் அவர் மதம் மாற்ற முயலவில்லை???
பெரும்பான்மையான மாணவர்கள் எம் மதமோ, அந்த மதத்தினைச் சேர்ந்த முதல்வரே பணிக்கு வர வேண்டும்”. முழு அரச பாடசாலை, எந்த இந்து அமைப்பும் உதவி செய்வதும் இல்லை..
அப்படி எந்த விதியுமில்லை, இப்படிப் பெரும்பான்மை வாதம் பார்த்தால் சிங்களவர் செய்ததும் சரி என்றாகி விடுமே!!!
அவர் வேலணையில்லை, அவர் இப் பள்ளியின் பழைய மாணவரில்லை ” அவ்வாறு விதிகள் எதுவுமில்லை. இலங்கையின் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாகவோ/ அப் பள்ளிக் கூடத்தினைச் சேர்ந்தவர்களோ அல்லவே????
இவ்வாறு வலுவற்ற வாதங்களை முன் வைத்தே போராட்டம் நடக்கின்றது. இதன் பின்புலம் என்னவென்றால் அப் பள்ளியின் முதல்வருக்கு விண்ணப்பித்தவர்களிலொருவர் தரம் 3 தகுதியினை உடையவர், அவர் குறித்த கத்தோலிக்க மதத்தினைச் சார்ந்த தரம் 1 முதல்வரை விழுத்தி விட்டு, அந்த இடத்தினைப் பிடிக்க செய்த சூழ்ச்சியே இது. இதற்கு அவருக்குச் சார்பான சில ஊரார்களுமுண்டு. இவ்வாறு தொடங்கிய முரணானது, அண்மையில் யாழ்ப்பாணத்தில் வளர்த்து எடுக்கப்பட்ட சிவசேனை போன்ற மதவாத அமைப்புக்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டு, இந்த நிலைக்கு வந்துள்ளது.
எத்தனையோ புரட்சிகரமான மாணவர் போராட்டங்களை நடாத்திக் காட்டிய யாழ் மண்ணில் இப்படி ஒரு பிற்போக்கான மாணவர் போராட்டம் நடப்பதனை என்ன சொல்வது!
தந்தை செல்வா என்றொரு கிறித்தவரைத் தமது அரசியல் தலைவராக, தேசத்தின் தந்தையாக ஏற்றுக் கொண்டிருந்த ஈழம் இன்று எங்கே செல்லுகின்றது! தந்தை செல்வா இறுதியாகச் சொன்னது ” இனிக் கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும்” என்று. அக் கடவுள் காப்பாற்ற வரப் போவதில்லை, ஆனால் அவரது வெவ்வேறு பெயர்களில் தமிழரைப் பிளவடையச் செய்து அழிவடைய வழி செய்வது மட்டும் நடப்பது நன்கு தெரிகின்றது.
ஈழத் தமிழரை வழிநடத்த வேண்டிய ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் வழமை போல, ‘சிவனே ‘ என்றிருக்கின்றன!
