கிளிநொச்சியில் மனைவி மீது கணவன் கொடூரத் தாக்குதல் (புகைப்படங்கள்)
கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மனைவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று இரவு சம்பவம் இடம் பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இப்பெண் தாய் தந்தையை சிறுவயதிலே இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான செயற்பாடுகளை கண்டிப்பதுடன் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டி நிற்கின்றனர்.

