புதினங்களின் சங்கமம்

மில்லியன் பெறுமதியான போலி பணத்தாள்களுடன் யாழ் பல்கலைக்கழக மாணவனும் ஆட்டோச்சாரதியும் கைது!!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் ஒருவரும் பளை பகுதியில் பெருமளவு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 250 உம், 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 27 யும் பொலிஸார் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்