புதினங்களின் சங்கமம்

யாழ் ஊர்காவற்துறை பெண்கள் 2 பேர் மன்னாரில் செய்த திருவிளையாடல்!!

மன்னாரில் 600,000 ரூபா நிதி மோசடி செய்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டாரில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடியில் குறித்த பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பில் மன்னார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் 23 மற்றும் 42 வயதுடைய யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.