புதினங்களின் சங்கமம்

வெள்ளைக்காரிகள் உடனே உடல் உறவுக்கு சம்மதிப்பாளுக என நினைத்து செய்தேன்!! சிங்கள மீன்காரனின் வாக்குமூலம்!!

கிரிந்த கொடன சந்தியில் உள்ள தங்கும் விடுதிக்கு அருகில் வீதியில் காத்திருந்த பிரித்தானிய யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞன் ஒருவர் கிரிந்த பொலிஸாரால் நேற்று முன்தினம் (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிந்த பொலிஸ் பிரிவில் வசிக்கும் மீனவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு ஆளான யுவதி, தனது பெற்றோருடன் கிரிந்த மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா சென்றுவிட்டு, இரவு கிரிந்த கொடனா சந்தி பகுதியில் தங்குமிடம் ஒன்றைத் தேடி வந்துள்ளனர்.

அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கும் வசதியுள்ளதா என்று விசாரிக்க பெற்றோர் சென்றுவிட, வீதியோரத்தில் யுவதி நின்றிருந்தார்.

அப்போது வீதியில் சென்று கொண்டிருந்த மீனவர் ஒருவர், பிரித்தானிய யுவதியொருவர் வீதியில் தனியாக நிற்பதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

உடனடியாக யுவதியிடம் சென்று, அவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த யுவதி, சுதாகரித்துக் கொண்டு மீனவருக்கு இரண்டொரு அறை கொடுத்து, சத்தமிட்டபடி, அவரை மடக்கிப்பிடிக்க முயன்றார்.

ஒரு முத்தத்திற்கு இவ்வளவு சத்தமா என அல்லோலகல்லோலப்பட்ட மீனவர், நிலத்தில் விழுந்த தனது கைத்தொலைபேசி எடுக்கவும் அவகாசமின்றி தப்பியோடியுள்ளார்.

தன்னை துஷ்பிரயோகம் செய்ய வந்த இளைஞனின் கைத்தொலைபேசி நிலத்திலிருப்பதை அவதானித்த யுவதி, அதனை எடுத்து பொலிஸார் ஒப்படைத்து கிரிந்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அந்த தொலைபேசியின் உரிமையாளரான மீனவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இரவில் மதுபோதையில் வந்ததாகவும், வெளிநாட்டு பெண்கள் மற்றவர்களுடன் உறவு கொள்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் என நினைத்து அத்துமீறியதாகவும் இளைஞன் தெரிவித்துள்ளார்.