புதினங்களின் சங்கமம்

தீ விபத்தில் 35 வயதான பெண் உயிரிழப்பு

நாவுல – பிலிஹுடுகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின் விளக்கினால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

தீ விபத்தில் காயமடைந்த 35 வயதான பெண் மாத்தளை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

 பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.