வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பை பிடித்து கையால் பிசைந்து விளையாடிய யாழ்ப்பாண குடும்பப் பெண்!! (Photos)
யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்றைய தினம் 6 அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்துள்ளது.
இதனை அவதானித்த அந்த வீட்டுப்பெண் குறித்த பாம்பினை கையால் சர்வசாதாரணமாக பிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அந்த பாம்பு யாரையும் தீண்டவில்லை என தெரியவருகிறது.
பிடிக்கப்பட்ட பாம்பு செண்மணி வெளியில் உயிருடன் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




