புதினங்களின் சங்கமம்

சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து கோவிட் நோயாளி தப்பியோட்டம்!

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றாளர் ஒருவர் இன்று காலை தப்பியோடியுள்ளார்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே தப்பியோடியுள்ளார்.

அவர் கடந்த ஒரு வாரமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.