புதினங்களின் சங்கமம்

சற்று முன் யாழில் முஸ்லீம் தீவிரவாதிகள்?? முதியவர் படுகாயம்!! (Photos)

முஸ்லீம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபதிபரை மோதிவிட்டு NPXF – 3281 என்ற இலக்க மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பலாலி வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபரை மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் வயோதிபர் படுகாயமடைந்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அதன் போது விபத்துக்கு உள்ளான இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை அங்கிருந்து மீட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அந்த நால்வரும் மோட்டார் சைக்கிளை மீட்டு செல்வதனை அவதானித்த அங்கிருந்தவர்கள் அதனை தடுக்க முற்பட்ட போது அவர்களை அச்சுறுத்திவிட்டு மோட்டர் சைக்கிளை எடுத்து சென்றுள்ளனர். மக்களும் முஸ்லீம் குண்டுதாரிகளாக இருக்கும் என்ற அச்சத்தில் அவர்களை நெருங்கவில்லை.

இதேவேளை மோட்டார் சைக்கிள் விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்த போதும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.