புதினங்களின் சங்கமம்

முல்லை. ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா !!

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
குறித்த ஆடை தொழிற்சாலையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 30 அதிகாரிகள் மட்டில் பணியாற்றி வருகின்றனர்
இவர்களில் 10 பேருக்கு எழுமாறாக பிசிஆர் பரிசோதனைகள் செய்த வேளையிலேயே 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சாதாரண பணியாளர் ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றுவதால் மேலும் பலருக்கு தொற்றுப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.