புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சியில் தனித்திருந்த சுலக்சன் மர்மமான நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குடத்தனை தரவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை என்று தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
May be an image of 1 person, standing, sky and tree