யாழில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலில் தந்தை பலி..! (Photos)
யாழ்.புத்தூர் – சிறுப்பிட்டி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு
இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார்.
தாக்குதலுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அச்சுவேலி பொலிஸார், தாக்குதல்
நடத்தியவரைத் தேடி வருகின்றனர்.


