யாழ்ப்பாணம் கோட்டைக்குள் சந்தேகத்துக்கு இடமான மூவர் உள்நுழைந்தனர் என்று கிடைத்த
தகவலையடுத்து கோட்டையை சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து
சுற்றிவளைத்துள்ளனர்.
“யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையின் உள்பகுதியில் இன்று மாலை
சந்தேகத்துக்கு இடமான மூவர் நுழைந்தனர் என்று தகவல் தரப்பட்டது.
அதனடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் கோட்டையைச்
சுற்றிவளைத்துள்ளனர். அத்துடன், இராணுவத்தினரும் அங்கு விரைகின்றனர்” என்று பொலிஸ்
தரப்பால் தெரிவிக்கப்பட்டது.





