பொலிஸ், இராணுவத்தின் உச்ச பாதுகாப்பு யாழ் ஆயர் இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை(21) மேற்கொள்ளப்பட்ட குண்டுதாக்குதலை
அடுத்து மேற்குறித்த பாதுகாப்பு நடவடிக்கை ஆயர் இல்லத்திற்கு
வழங்கப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத அங்கிகளுடன் இராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு
நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன் ஆயர் இல்லத்திற்கு அருகாமையில்
பாதுகாப்பு சோதனை நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.





