Vampan memesபுதினங்களின் சங்கமம்

இரகசியமாககக் காணிகளை விற்கும் விதாணைகள்!!

மாங்கேணி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில பிரப்பையடிமடு கிராமத்தில் பல ஏக்கர் காணிகள் கண்ணமுத்து தயாளன் எனும் கிராம உத்தியோகத்தர் அவர்களால் விற்பனை செய்ய பட்டுள்ளது.

கிருமிச்சை பகுதியில் பல குடியிருப்பு காணிகளும் வயல் காணிகளும் கஜேந்திரன் கிராம உத்தியோகத்தர் அவர்களும பல இலட்சங்களை பெற்று மாற்றானுகளுக்கு விற்பனை செய்ய பட்டுள்ளது.

புணானை கிழக்கு காணிகள் பல இரகசியமாக விற்பனை செய்ய பட்டுள்ளது இதற்கு தெய்வேந்திரன் கிராம உத்தியோகத்தர் துணை புரிகின்றார். அஸ்கர், மதி, கஜேந்திரன், தயாளன், போன்றோர் மக்களிடம் இலஞ்சம் பெற்று மோசடியான வேலைகளை செய்து வருகின்றார்

மேலும் பிதேச செயலாளரின் தனிப்பட்ட முயற்சியால் அலுவலக பதிவின்றி புணானை கிழக்கின் வனப்பரிபாலனத்துக்குட்பட்ட பகுதிகள் மற்றும் குளத்தை அண்டிய பகுதிகள் குறிப்பாக கட்டுச்சேனை மியான்கல்குளம் ஆலங்குளம் ஓமடியாமடு குளத்தின் எல்லை பகுதிகளில் பெருமளவான மண்ணகழ்வு இடம்பெறுகின்றது இதற்கான பெருந்தொகை இலஞ்சமம் வழங்க பட்டுள்ளது.
மண்பேமிட் வெளி பிரதேச முஸ்லிம் நபர்களுக்கு கரன் அவர்களால் எந்தவொரு ஆவண பதிவுமின்றி தன்னிச்சையாக வழங்கியுள்ளார்.
மாங்கேணி தெற்கு பகுதியில் மத்திய தர வர்க்கத்துக்கென அடையாள படுத்தப்பட்ட காணிகளை போலி ஆவணம் தயாரித்து பெருமளவு விலக்கு கிராம உத்தியோகத்தர் கஜேந்திரகுமார் வேந்தன் கரன் ஆகியோரால் விற்கப்பட்டுள்ளது. பிப்பிங்கா பதப்படுத்தல் நிலையத்திற்கு அரகில் காணப்படும் பெருமளவான விற்க பட்டுள்ளது.

மாங்கேணி மத்தி மாவடி.ஓடை பகுதியில் ஏனைய பிரதேச மக்களுக்கு விவசாய செய்கைக்காக இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட தொகைக்கு பணத்தினைபெற்று காணிகளை அஸ்கர் மற்றும் கஜேந்திரன் கிராம உத்தியோகத்தர்கள் வழங்கியுள்ளனர்.

நன்றி

எல்லாளன் ஊடக வலையமைப்பு