புதினங்களின் சங்கமம்

மன்னாரிலும் குண்டு மீட்பு!!

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பன்னை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றை மன்னார் பொலிஸார் இன்று (22) காலை மீட்டுள்ளனர்.

குறித்த பன்னையின் உரிமையாளர் குறித்த பன்னையை துப்பரவு செய்து கொண்டிருந்த போது முருங்கை மரத்தின் கீழ் வெடி பொருள் புதைத்து வக்கப்பட்டுள்ளமையினை அவதானித்த நிலையில், உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மன்னார் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த வெடி பொருளையும் பார்வையிட்டனர்.

இதன்போது கிளைமோர் குண்டு ஒன்றே பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த விடையம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு, கண்டு பிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டினை மீட்டு செயல் இழகக்கச் செய்யும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் தொடர்ச்சியாக வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று வருகின்ற நிலையில், ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் குண்டு மீட்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.