மணிவண்ணன் சார்பு மாநகரசபை உறுப்பினர்களை களையெடுக்கும் படலம் ஆரம்பம்!!
யாழ்.மாநகரசபை உறுப்பினர்களாக உள்ள தமது கட்சிசார்ந்த 6 பேரை பதவி நீக்கம் செய்வதற்கு
வழி என்ன? என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஆலோசனை கேட்டிருக்கின்றது.
மாநகர சபைத் தேர்தலில் கட்சியின் சார்பில் நேரடியாக வட்டாரங்களில் போட்டியிட்டு
வெற்றிபெற்ற இந்த 6 உறுப்பினர்களையும் உறுப்பினர்களின் சம்மதம் இன்றி கட்சியாக
வெளியேற்றுவதற்கான நடைமுறை என்ன , அதனை நீக்கும் அதிகாரம் கட்சிக்கு உண்டா, எந்தச்
சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களை பதவி நீக்க முடியும் என்பது தொடர்பிலேயே இந்த ஆலோசணை
பெறப்பட்டுள்ளது.
ஒரு உறுப்பினர் பதவியானது அவரது சபை அங்கத்துவத்தை இழப்பது பதவி விலகல் மூலம்,
அல்லது நீதி மன்ற உத்தரவின் பெயரில், அல்லது கட்சியின் உறுப்புறுமை முற்றாக இழப்பதன்
மூலம் மட்டுமே என்ற ஆலோசணை கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியில. அக் கட்சியின் தலமைக்கும் மணிவண்ணன் தலமையிலான அணிக்கும் இடையிலான முறுகல்
உச்சமடைந்துள்ள நிலையில்
மணிவண்ணன் சார்பான கட்சி முக்கியஸ்தர்களைகளை எடுக்கும் பணியும் ஆரம்பித்துள்ளதாக செய்திகள்
வெளிவந்த நிலையில் முதல்கட்டமாக மாநகர சபை மீது முன்னணி கவனம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் முன்னணிக்கு 13 உறுப்பினர்கள் கிடைத்த நிலையில் ஒருவர்
நீதிமன்ற கட்டளையின் பெயரில் சபைக்கு சமூகமளிக்க முடியாது.
எஞ்சிய 12 பேரில் நால்வர் மட்டுமே கஜேந்திரன் சார்பு அணிக்கும் எஞ்சிய 8 பேரும்
மணிவண்ணனிற்கு சார்பாகவுமே உள்ள நிலையில் அதில் பட்டியல் மூலம் தேர்வான இருவரையும்
பதவி விலகுமாறு கட்சி ஏற்கனவே தெரிவித்து விட்டது. எஞ்சிய 6 பேரையும் பதவி
விலக்குவதற்கு வழி தேடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் முன்னணியின் 8 பேர் கொண்ட அணியில் உள்ள
ஒருவரைத் தொடர்புகொண்டு இது தொடர்பில் கேட்டபோது மாவட்டச் செயலகத்தில் இதற்கான ஆலோசணை
பெற்றது தொடர்பில் நாமும் அறிந்து கொண்டோம். அது மட்டுமன்றி கட்சிக்காக பாடுபட்ட எம்மை
ஈ.பீ.டீ.பியில. இணையுமாறும் கூறியுள்ளனர்.
கட்சியில் இருப்பதா இல்லையா என்பதனை வேண்டுமானால் தலமை முடிவு செய்யலாம் ஆனால்
எங்கிருந்து செயல்பட வேண்டும் என்பதனை முடிவு செய்யும் அதிகாரம் எமக்கு மட்டுமே உண்டு
அது தலமைக்கு கிடையாது என்பதனை அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

