யாழிலிருந்து விசிட் விசாவில் கனடா சென்ற தமிழ் யுவதிக்கு நடந்த கதி!!
யாழிலிருந்து விசிட் விசாவில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா பெறுவற்காக கொடுத்த தகவல்களும் விசாரணைகளின் போது கொடுத்த தகவல்களும் மாறுபட்டவையாக இருந்தமையாலும் யுவதியை அழைத்த சகோதரி குடும்பத்தினர் வழங்கிய தகவல்களும் தவறானவையாக இருந்த காரணத்தாலுமே குறித்த யுவதி திருப்பி அனுப்பபட்டதாக தெரியவருகின்றது.