புதினங்களின் சங்கமம்

கொடிகாமம் அல்லாரை பகுதியில் வாள்வெட்டு வன்முறை! குடும்பஸ்தர் படுகாயம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்லாரை பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் குழு நடத்திய வாள்வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சற்று முன்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற வாள்வெட்டுக் குழுவினர் அல்லாரையில் 38 வயதுடைய குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தினர்.

சம்பவத்தில் அவர் இரண்டு கால்களிலும் படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து நோயாளர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டு அதில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.