புதினங்களின் சங்கமம்

நிறை போதையில் இளைஞன் மீது சரமாரித் தாக்குதல்.!! யாழில் நடந்த சம்பவம்…

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தின் கெற்பேலி மத்தி பகுதியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

20 வயதுடைய ரவிச்சந்திரன் செந்துஜன் என்பவரே இவ்வாறு காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது..

கெற்பேலி மத்தி பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகாமையில் பாலாவியிலிருந்து வந்த இருவர் கசிப்பு அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

நேற்றைய தினம் கெற்பேலி மத்தி பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகில் இருவர் அருந்தும் போது அந்த வழியாக சென்ற இளைஞர்களை கசிப்பு அருந்த அழைத்துள்ளனர். அந்த வழியே சென்ற இளைஞர்கள் இருவரும் மது அருந்த மறுத்ததால் அவர்களை தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.