புதினங்களின் சங்கமம்

யாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி!! மழையில் நடந்த சோகம்!!

குப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில்
சுன்னாகம் குப்பிளான், மயிலங்காடு பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை
பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான், மயிலங்காடு பகுதியில் இன்று
பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (வயது- 48), கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும்
ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்தனர்.

தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு பேர் வேலை
செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக
வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோரில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும்
வேலைசெய்துகொண்டிருந்தனர்.

அதன் போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த
தென்னைமரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் அவர்கள் மூவரும்
ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது இடி மின்னல் அந்த்த்  தென்னை மரத்தின் மீது விழுந்ததில்
மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உணவு எடுக்கச் சென்றவர்
திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்துள்ளமை
தெரியவந்துள்ளது.