புதினங்களின் சங்கமம்

யாழில் சற்று முன் மேலும் இருவருக்கு கொரோனா!! சுவிஸ் போதகரின் எழுப்புதலில் பங்குபற்றிய

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை வெளியான அறிவித்தலில் ஒருர் பாதிக்கப்பட்டிருந்தார் என தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்படி தற்போது யாழில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் இருந்து வந்து யாழில் எழுப்புதல் கூட்டம் நடத்திய போதகரினால் ஏற்கனவே கட்டட ஒப்பந்தக்காரருக்கு கொரோனா பரப்பப்பட்டிருந்தது. சுவிஸ் போதகர் கொரோனாவினால் தாக்கப்பட்ட விடயம் வெளியானதும், யாழில் போதகருடன் நெருக்கமாக இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பலாலியில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களில் 10 பேரிடம் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. தற்போது பிந்திய தகவலின்படி, மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.