புத்தாண்டு தினத்தில் புதுப்பொலிவு பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய ராஜகோபுர மணிக்கூடு
வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்தின் நல்லூர் கந்தசுவாமி ஆலய ராஜகோபுர மணிக்கூடு ஆங்கிலப் புத்தாண்டில் நள்லிரவு புதுப்பொலிவுடன் மீள அமைக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அதிகாலை 00.01 நிமிடங்களில் இந்த மணிக்கூடு ஆலய தர்மகர்த்தாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நல்லூரானின் இராஜகோபுர மணிக்கூடு ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் மணி அடிக்கும் படி கடந்த பல தசாப்காலமாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆலய மணிக்கூடு புதுப்பொலிவுடன் 2020 ஆங்கிலப் புத்தாண்டில் சீரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






