கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து
பரந்தன் – முல்லை A35 வீதியில் முரசுமோட்டை பகுதியில் இன்று (09) காலை இவ் விபத்து இடம்பெற்றது.
இரணைமடு குளத்திற்கு நன்னீர் மீன்பிடிப்பிற்காக மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்தவரே விபத்துக்குள்ளானார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவது சாரதி மது போதையுடன் மோட்டார் வண்டியை செலுத்தியமையே விபத்திற்கு காரணம் என அறிய முடிகின்றது. விபத்துக்குள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.




