புதினங்களின் சங்கமம்

யாழ் வேலணை விபத்தில் இளைஞன் தலைசிதறப் பலி!! ஹெல்மட் அணியவில்லை!!

வேலணை பகுதியில் நேற்றிரவு (6) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வினோகரன் வசிகரன் என்ற இளைஞனே உயிரிழந்தார்.

தனது மோட்டார் சைக்கிளில் நாரந்தனையில் ஒருவரை இறக்கிவிட்டு திரும்பி வரும் சமயம், சரவணை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மாமரம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானார்.

விபத்தின்போது அவர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை. தலை சிதறிய நிலையில் உடனடியாக அவர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லலப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.