கிளிநொச்சியில் கிணற்றுக்குள் விழுந்த குடும்பப் பெண்ணுக்கு இராணுவம் செய்தது என்ன (Photos)?
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் கிணற்றிற்குள் விழுந்த குடும்பப் பெண்ணொருவரை இராணுவத்தினர் மீட்டு காப்பாற்றியுள்ளனர். 51வயது பெண் ஒருவர் தவறுதலாக விழுந்ததை அடுத்து அங்கே நின்ற ஒருவர் இராணுவத்திற்கு போண் பண்ணி விடயத்தை தெரியப் படுத்தியதும் அதி வேகமாக செயல்பட்ட இராணுவம் பெண்ணை மீட்டு மருத்துவ உதவியை உடனடியாக வழங்கி உயிர் போகும் நிலையிலிருந்து அப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்…….
தொட்டியடியில் அமைந்துள்ள 6வது சிங்க ரெஜிமெண்ட் படையினரே குறித்த பெண்ணை காப்பாற்றினர். இந்நிலையில் மீட்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நலம்தேறி வருவதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






