புதினங்களின் சங்கமம்

அதிர்ச்சிச் சம்பவம்: கரவனெல்ல பொதுக் கழிவறையில் பச்சிளம் குழந்தை மீட்பு!

கரவனெல்ல பகுதியில் உள்ள பொதுக் கழிவறையில், குழந்தையொன்றைப் பிரசவித்த தாய் ஒருவர், அக்குழந்தையைக் கழிவறைக்குள்ளேயே கைவிட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மனிதாபிமானமற்றச் செயலால் அக்குழந்தை ஆபத்தான நிலையில் தவித்தபோது, அங்கு வந்த ஷமீர ஹர்ஷ மற்றும் சுரங்க ஆகிய இருவரும் உடனடியாகச் செயல்பட்டு பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

அவர்களின் இந்த உன்னத செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

“உங்களிருவருக்கும் பல பிறவிகளிலும் புண்ணியம் கிடைக்கட்டும்” எனப் பலரும் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒருவேளை குடும்பச் சூழலோ அல்லது வேறு ஏதேனும் நிர்க்கதியான சூழ்நிலையோ காரணமாகவிருந்தாலும், இவ்வாறான கொடூர முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக பிறரிடம் உதவி கோரியிருக்கலாமே தவிர, இந்த அப்பாவிப் பிஞ்சுகளுக்குத் தண்டனை வழங்குவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு கணத்தில் கைவிடப்பட்ட அந்த மலராத உயிருக்கு, இந்த மனிதர்களின் துரிதச் செயல் இன்று புதிய வாழ்வைத் தந்துள்ளது.

மனிதாபிmத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஷமீர மற்றும் சுரங்க ஆகியோருக்கு நாமும் நமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வோம்! 🙏

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x