புதினங்களின் சங்கமம்

14 வயதுச் சிறுவனை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் செய்து வந்த 26 வயது யுவதி கைது!

14 வயது சிறுவனை மூன்று மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 26 வயது பெண் தெரபிஸ்ட் கைது
14 வயது சிறுவனை மூன்று மாதங்களுக்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, 26 வயதான பெண் தெரபிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடத்தைச் சுகாதார (Behavioral Health) நிபுணராக பணியாற்றி வந்த சோபியா ட்ரோட்ஸ் என்பவரே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்டினெஸில் உள்ள ஜான் டேவிஸ் சிறார் தடுப்பு மையத்தில் (Juvenile Detention Center) தங்கவைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர். கிளினிஷியனாக பணியாற்றிய காலத்தில் அந்தச் சிறுவனின் பொறுப்பு சோபியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், சிறுவன் சிறார் தடுப்பு மையத்திலிருந்து வெளியேறிய பிறகு, தொடர்ந்து மூன்று மாதங்கள் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜூலை 14 வரை இந்தச் சம்பவங்கள் நடைபெற்றதாக வழக்கறிஞர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிறார் தடுப்பு மையத்தின் மேற்பார்வையாளர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஜூலை 14 அன்று கான்கார்டு போலீசார் சோபியாவை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரும் சோபியாவுக்கு எதிராக தனியாக மற்றொரு சிவில் வழக்கையும் தொடர்ந்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x