புதினங்களின் சங்கமம்

மஹர சிறைச்சாலையை உடைத்து வெளியேற கைதிகள் கடும் முயற்சி!! அப்பகுதியில் பெரும் பதற்றம்!! வீடியோ

மஹர சிறைச்சாலையில் கைதிகளிடையே பெரும் மோதல்: ஒருவர் பலி; 6 பேர் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதி!
ராகம: மஹர சிறைச்சாலையில் இன்று (ஒகஸ்ட் 01, 2026) பிற்பகல் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பெரும் மோதல் மற்றும் பதற்றநிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் அமைதியின்மையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் குழுவொன்று பிரதான ஜெயிலர் அலுவலகம் (Chief Jailer’s Office) மற்றும் ஒழுக்கக்கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகிய கட்டிடங்களுக்குத் தீ வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு தொகுதி கைதிகள் சிறைச்சாலை கட்டிடத்தின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தின் போது சிறைச்சாலைக்குள் இருந்து பலமுறை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்ட சத்தம் கேட்டதாக வெளியில் காத்திருந்த கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகள் குழுவொன்றினால் இந்த அமைதியின்மை ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அவசரமாக அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தற்போது சிறைச்சாலையின் நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x